×

வீட்டை பட்டா மாறுதல் செய்துதர கைம்பெண்ணிடம் ரூ10,000 லஞ்சம் வடுகப்பட்டி விஏஓ அதிரடி கைது

மொடக்குறிச்சி: ஈரோடு மாவட்டம் அரச்சலூர் அடுத்த வடுகப்பட்டி வடக்கு வீதியை சேர்ந்த புவனேஸ்வரி (35). இவரது கணவர் குமார் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இதையடுத்து வடுகபட்டியில் உள்ள வீட்டை பட்டா மாறுதல் செய்வதற்காக புவனேஸ்வரி வடுகபட்டி ஏ. கிராம விஏஓ வெற்றிவேலை அணுகினார். அப்போது பட்டா மாறுதல் செய்து தருவதற்கு வெற்றிவேல் ரூ. 40 ஆயிரம் பணம் கேட்டுள்ளார். பேரம் பேசி இறுதியாக ரூ.30 ஆயிரம் தருவதாக பேசப்பட்டது. இதனையடுத்து ரூ.19 ஆயிரம் பணத்தை புவனேஸ்வரி கொடுத்துள்ளார். மீதித் தொகையை கேட்டு அடிக்கடி புவனேஸ்வரியை வெற்றிவேல் தொந்தரவு செய்ததாக தெரிகிறது. இதுகுறித்து ஈரோடு லஞ்ச ஒழிப்பு போலீசில் புவனேஸ்வரி புகார் அளித்திருந்தார். அவர்களது அறிவுரைபடி நேற்று மதியம் புவனேஸ்வரியிடம் ரூ.10 ஆயிரம் பணத்தை புவனேஸ்வரி கொடுத்தார். அதை விஏஒ வெற்றிவேல் பெற்றபோது லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு இன்ஸ்பெக்டர் ரேகா தலைமையிலான போலீசார் நேற்று மதியம் முதல் இரவு வரை வெற்றிவேலிடம் தீவிர விசாரணை நடத்தினர். கைதான விஏஓ வெற்றிவேல் கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தாலுகா அஞ்சூர் அடுத்த குழந்தைபாளையம் பகுதியை சேர்ந்தவர் ஆவார்….

The post வீட்டை பட்டா மாறுதல் செய்துதர கைம்பெண்ணிடம் ரூ10,000 லஞ்சம் வடுகப்பட்டி விஏஓ அதிரடி கைது appeared first on Dinakaran.

Tags : Modakkuruchi ,Bhuvaneswari ,Arachalur, Erode district ,Kumar ,Dinakaran ,
× RELATED ஆதிதிராவிடர்களுக்கான தென்னை சாகுபடி மதிப்புக்கூட்டுதல் பயிற்சி முகாம்